செவ்வாய், 19 ஜூலை, 2011

அன்றொருநாள்...


நிமிடங்கள் கூட நிஷப்தித்து போன
ஏகாந்த இரவில்....
உன் மடி மீது நான்
அண்ணாந்து பார்க்கின்றேன்
ஒன்று.....
வான் நிலா
மற்றையது.....
உன் மதி முகம்
அம்மா
இன்றும்கூட நினைவை நிறைக்கிறது
என் செவியுண்டியலில்
சேகரித்து வைத்துள்ள
அன்றொருநாள்.....
என்னை தமிழறிய வைத்த
நீ பாடிய
தாலாட்டு பாடல்.....